Skip to main content

"அதிமுக அரசின் விளம்பரப்பட்டா, வேதனையில் பொது மக்கள்".

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அதிமுக அரசின் செல்வாக்கு நிரம்பி வழியும் ஒரு தொகுதி தான் ஆண்டிபட்டி, குறிப்பாக அதிமுக அரசின் முக்கிய தலைவர்கள் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ) பலமுறை இத்தொகுதியில் நின்று மகத்தான வெற்றிப்பெற்றுள்ளனர்.இன்று அதிமுக அரசு (அதிமுக,அமமுக) என இரண்டாக பிரிந்துள்ள நிலையிலும் அதிக அளவில் செல்வாக்கு படைத்துள்ள தொகுதியாகவே விளங்குகின்றது. ஆனால் இத்தொகுதியில் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா மக்களிடம் இன்றும் சென்றடையவில்லை.
   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மேக்கிழார்பட்டியில் , அதிமுக அரசின் சார்பாக 15/04/2002 அன்று ஆண்டிபட்டி -சேடபட்டி கூட்டுக்குடிநீர்த்திட்டத் துவக்க விழா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.  இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கைகளினால் வழங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் இன்றும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இத்திட்டத்தை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் மனவருத்தத்துடன் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

 

complaint

  

அப்போதைய அதிமுக அரசு ஆதிதிராவிடர்களுக்காக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதன் மூலம் ஒரு பெரிய விளம்பரத்தை மட்டுமே நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பட்டா என்ற பெயரில் முதலமைச்சரின் புகைப்படம் கொண்ட கவர் ஒன்றை மட்டுமே வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 220 க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.இவர்களுக்கு இது வரையிலும் முறைப்படி இத்திட்டம் சென்றடையவில்லை. 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு பல்வேறு ஆர்பாட்டங்களை நடத்தியும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பயன் இல்லை. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் நிலத்தை அளவிட்டு தந்துள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கு சரியான பாதையும் இல்லை. நிலம் கொடுத்த அரசு பாதையில்லை என்று மக்களை பலமுறை ஏமாற்றியுள்ளது. பின்பு மீண்டும் ஆர்பாட்டங்களை நடத்தி பாதை பெறப்பட்டது.ஆனால் அந்த பாதையில் செல்ல முடியாதவாறு 5 அடி உயரத்தில் ஒரு பாறை இருந்தது. அந்த பாறையை உடைக்கவும் அதிகாரிகள் முன் வரவில்லை . அப்பாறையை மக்கள் தங்களின் சொந்த பணத்தை செலவழித்து அகற்றமுற்பட்ட பொழுது அதற்கும் அதிகாரிகள் தடைவிதித்தனர். 
 

theni

பின்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டு அதற்கு அனுமதி பெறப்பட்டது. தற்பொழுது சொந்த செலவில் மக்கள் பாதையை உருவாக்குகின்றனர். இப்படிபட்ட சூழ்திலையில் 11.19 ஏக்கர் நில பரப்பளவு கொண்ட இடத்தை ஒதுக்கியுள்ள அரசு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனிப்பட்டா மற்றும் நிலத்தை பிரித்தும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி நாம் விசாரித்த போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த பயனாளி இசக்கியம்மாள் கணவர் முத்துராஜ் " சார் 2002 ல ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் என்ற பெயரில் மாபெரும் விளம்பரத்தை நடத்திட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கல இதற்கு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகவும் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் இத்திட்டத்தின் மூலம் தெப்பம்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை, மேக்கிழார்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களும் பயனாளிகளாக உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த அனைத்தும் கனவாக மாறிவிடும் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். ஏனெனில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் பல்வேறு இலவச வீட்டுகளுக்கான திட்டங்கள் இவ்விடத்தில் அரங்கேறியிருக்கும் இதை விரைவில் செயல்படுத்தி எங்களுக்கான உரிமத்தை அரசு வழங்க வேண்டும்" என்கிறார் முத்துராஜ். 



பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.