Skip to main content

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை... - அமைச்சர் செங்கோட்டையன்

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

  

செங்கோட்டையன்

 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்பது பற்றி எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

 

இந்நிலையில் ஜூலை 28 அன்று ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் நேற்று (ஜூலை 29) செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்ததோடு தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மனித நேயத்துடன் அரசு செயல்படுகிறது!" - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு...

Published on 06/02/2021 | Edited on 07/02/2021

 

minister sengottaiyan speech at erode


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 128 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

 

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்த 8 கிராம் தங்கத்தின் விலை, அப்போது நிதி ஒதுக்கிய போது ரூபாய் 32 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது ரூபாய் 36 ஆயிரமாக உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளையும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நிரத்தர பட்டாக்களாக மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 

minister sengottaiyan speech at erode


'நாங்கள் சொன்னதால்தான் அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என்று சிலர்  சொல்லுகிறார்கள். ஆனால், இன்று விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்துள்ளது. மனிதநேயத்துடன் நமது அரசு செயல்படுகிறது. பொங்கல் பரிசு ரூபாய் 2,500 வழங்க வேண்டும் என அவர்கள் சொன்னார்களா? நாங்கள் செய்துள்ளோம். ஆட்சியில் இருப்பவர்கள் நாங்கள்; எங்களால் மட்டுமே செய்யமுடியும். தேர்தல் களத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், செயல்படுத்த முடியாது. வாக்குகளை மக்களிடம் ஏமாற்றி வாங்கவே அவர்கள் பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். 
 

minister sengottaiyan speech at erode


தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் சொன்னார்கள் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரமுடியாது என்று, ஆனால் தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அரசுக்கு 18 ஆயிரம் கோடி நிதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும் மக்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு செய்யும் பல்வேறு பணிகளை மக்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்லுங்கள்" என்றார். 

 

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Next Story

"மற்ற வகுப்புகளும் படிப்படியாகத் திறக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

schools reopening minister sengottaiyan pressmeet erode

 

ஆய்வு செய்து படிப்படியாகப் பிற வகுப்புகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

 

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "முதல் கட்டமாகத் திறக்கப்படும் 10, 12- ஆம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. 98% மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விருப்பமுள்ள 10, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் செல்லலாம். பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.