Skip to main content

சரித்திரச் சிறப்புகளைக் கொண்ட சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து!!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
adithapasu festival cancel

 

இந்த யுகம் தோன்றிய கல்ப கோடி காலத்திற்கு முன்பு கௌரவம் காரணமாக சைவம் பெரியதா, வைணவம் பெரியதா, என்று இரு சமயப் பற்றாளர்களுக்குள்ளே கலகம். ஆயிரக்கணக்கானோர் வெட்டியும் குத்தியும், குருதியாறு பாய பலியானார்கள். ரத்த ஆற்றை கட்டுப்படுத்த வேண்டிப் பதறிய முப்பது முக்கோடி தேவர்களும், காக்கும் கடவுளான சர்வேஸ்வரனைச் சரணடைந்து, பக்தர்களைக் காத்தருளும்படி முறையிட்டனர்.

 

பக்தர்களைக் காக்கும் பொருட்டு தன் உடலில் ஒருபுறம் சிவனாகவும், மறுபுறம் அரியாகவும் ஒருசேர உருவெடுத்து பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமான், சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற ஒற்றுமையே உலகுக்கு உணா்த்த, சைவ வைணவப் போர் முடிவுக்கு வந்தது.

 

அண்ட சராட்சரத்தையும் ஆளுகின்ற சர்வேஸ்வரனின் இந்த அரிய காட்சியைத் தனக்கும் காட்டியருளுமாறு உமையவள் பார்வதி தேவியாரும் பகவானை வேண்ட, அவரின் ஆக்ஞைபடி, பூலோகத்தின் பொதிகையடிப் புன்னைவனத்தில் தேவியாரும் பல்லாண்டு காலம் தவம் செய்ததை மெச்சிய எம்பெருமான், தன்னில் சங்கரரும், மறுபுறம் நாராயணராக ஒருசேர அமையப்பெற்ற (அரியும் சிவனும்) உருவாய் பார்வதி அம்மைக்கு காட்சியளித்தார். இந்த அரிய அருட்காட்சி வைபவம், பொதிகையடிப் புன்னைவனத்தில் நடக்கப்பெற்றதால் அந்த இடம் சங்கரநாராயணர் கோவில் என்றானது.

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் என்றழைக்கப்படும் நகரில் ஆடிமாத பௌர்ணமியில் ஆண்டவனின் அருட்காட்சி நடக்கப்பெற்றதால் அது ஆடித்தபசு காட்சி என்று சரித்திரத்தில் கல்வெட்டாய்ப் பதிவானது.

 

சிவபெருமானே உமையவள் பார்வதியம்மைக்கு காட்சி கொடுத்த அந்த அரிய ஆடித்தபசு காட்சி தினத்திற்கு முன்பாக பத்து விதமான மண்டகப்படித்தாரர்களால் பத்து நாட்களாக பகவானுக்கு சிறப்பாக பூஜைகள், தீப ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் என்று நடத்தப்படுவதையும் இறுதியாக பதினோறாம் நாளான சிவபெருமான், பார்வதியம்மைக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழாவைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். பல நூறு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது ஆடித்தபசு காட்சி. அந்தத் திருவிழாவிற்கான நாளைய கொடியேற்றமும் ஆக 2ல் நடக்கிற ஆடித்தபசு காட்சி திருவிழாவும் கரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆலய நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது பக்தர்களிடம் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கரோனாவின் திருவிளையாடல், இனி எதையெல்லாம் தாக்க காத்திருக்கிறதோ என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.