அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடும் சரிவைசந்தித்தன. இந்நிலையில், பொதுமக்களின் முதலீடுகளைக்கொண்ட எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் மூலம் அதானி நிறுவனத்திற்கு அதிக அளவில்கடன்களை வழங்கி அதானியின் வர்த்தக மோசடிக்கு துணை போன மத்திய பாஜகவின் மோடி அரசைக் கண்டித்து மத்தியச் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில்கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.