Skip to main content

'அக்குபஞ்சர்' முறையில் பிரசவம் பார்த்த கணவன்; தாயும் சேயும் பலியான சோகம்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

Acupuncture medical treatment .. Mother and child passes away

 

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கிராமங்கள்தோறும் இருந்த மருத்துவச்சிகள் பிரசவம் பார்த்து குழந்தைகளை நலமுடன் (சுகப் பிரசவத்தில்) வெளியே எடுத்து சாதனை படைத்தனர். ஆனால், இறப்பு விகிதம் அன்றைய காலகட்டத்தில் சற்று கூடுதலாகவே இருந்தது.


50 வருடங்களுக்குப் பிறகு தற்போது நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்த நிலையில், தேதி, நேரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு குழந்தைகளை சிசேரியன் மூலம் வெளியே எடுக்கும் புதிய சிகிச்சை முறைகள் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில், அக்குபஞ்சர் மூலம் பிரசவத்தைக் கையாண்டு குழந்தை பெற்றெடுக்க முயற்சிசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியைச் சேர்ந்தவர் விஜயவர்மன் (35). இவர் அக்குபஞ்சர் முறை வைத்தியர், இவரது மனைவி அழகம்மாள்(29). இளங்கலை மருத்துவச் செவிலியர் பயின்றுள்ளார். திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், அழகம்மாள் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.


கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைக்கு கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம். இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே தேடிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது. 

 

இந்நிலையில் அழகம்மாளுக்கு கடந்த சனிக்கிழமை 09.01.2021 இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. 
 


அழகம்மாளின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா எஸ்.பி.யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் புகாரில் அழகம்மாளின் இறப்பு கொலை என்றும் அவருக்கு அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்ப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.