Skip to main content

சிகிச்சை முடியும் முன்னரே டிஸ்சார்ஜ் பண்ண வச்சது யார்? -நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Actress vijyalaxmi pressmeet

 

'ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை விஜயலட்சுமி கடந்த 26-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மன உளைச்சலில் இருப்பதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில் சிகிச்சை முடியும் முன்னரே தன்னை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், காயத்ரி ரகுராம் என்னுடைய நண்பர். நான் கஷ்டத்தில் இருப்பதால் மருத்துவமனை பில்-ஐ அவர்தான் கட்டியுள்ளார். ஆனால் யாரைக் கேட்டு என்னை  டிஸ்சார்ஜ் பண்ண வைத்தார்கள் என்பதை மட்டும் என்னிடம் சொல்லுங்கள். நான், பி.ஜே.பி.-யிடம் காசு வாங்கிக் கொண்டு பேசுவதாகச் சீமான் சொல்கிறார். இவங்க என்னை ட்ரீட்மெண்ட் பண்ண விடாமல் தூக்கி வெளியே போட்டுவிட்டார்கள். என்ன அவசரம் வந்துச்சு, எனக்கு உயிருக்கு ஆபத்து என்றால் யார் பொறுப்பு என்கிறார் விஜயலட்சுமி.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.