ADVERTISEMENT

ஒரு நடிகைக்கு எத்தனை பேரால் என்னென்ன தொல்லைகள்? -வீறிடும் விஜயலட்சுமியின் சோகப் பின்னணி!

11:56 AM Mar 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காதலனால் ஏமாற்றப்படுவது, பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது என ஒரு நடிகையின் வாழ்க்கையில் துயரங்கள் விடாமல் துரத்துவது கொடுமையாகத்தான் இருக்கிறது. இந்தக் கொடுமைகளெல்லாம் யாருக்கு? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், தலை கிறுகிறுக்கிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம்.

ADVERTISEMENT

விஜய் நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தில் அவருக்குத் தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் விஜயலட்சுமி. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் இவர், சின்னத்திரையிலும் தலை காட்டியிருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் விவகாரத்தை முதலில் பார்ப்போம்!

பெங்களூரில் வசித்துவரும் இவர் ‘ஹை பிபி’ காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செலவுக்குப் பணம் இல்லாத நிலையில், இவருடைய சகோதரி உஷா தேவி, திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டார். உடனே, ரவிபிரகாஷ் என்ற கன்னட நடிகர், மருத்துவமனைக்குச் சென்று ரூ.1 லட்சம் தந்து உதவினார். இவர் மீதுதான், புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார் விஜயலட்சுமி. அப்படி என்ன செய்தாராம் ரவிபிரகாஷ்? விஜயலட்சுமியின் கைபேசிக்குத் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பினாராம். ஆபாசமாகவும் பேசினாராம். இதைத்தான் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் விஜயலட்சுமி. நடிகர் ரவிபிரகாஷோ, “விஜயலட்சுமிக்கு உதவியதுதான் நான் செய்த தவறு.” என்று மறுக்கிறார்.

விஜயலட்சுமியின் கணக்கைப் பார்த்தால், அவருக்குத் தொல்லை அளித்தவர்களின் பட்டியல் நீளமானது. சன் டிவியில் தங்கவேட்டை நிகழ்ச்சியை இயக்கிய ரமேஷ் விஜயலட்சுமியை காதலித்து ஏமாற்றியிருக்கிறார். கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜனுக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தமெல்லாம் நடந்தது. ஆனாலும், காதல் முறிந்துபோனது. நம்ம ஊரு நாம் தமிழர் சீமானும் இவருடைய புகார்ப் பட்டியலில் இடம் பெற்றவரே! “மூன்று வருடங்களாகக் காதலித்து, திருமண ஆசைகாட்டி ஏமாற்றினார். அதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.” என்பதுதான் அப்போது சீமான் மீது விஜயலட்சுமி முன்வைத்த குற்றச்சாட்டு. இதில் வினோதம் என்னவென்றால், கயல்விழி என்ற ஆவியை ஏவிவிட்டு விஜயலட்சுமி குடும்பத்தாரின் நிம்மதியைக் குலைத்தாராம் சீமான். அதனால், ஆவியை விரட்டச் சொல்லி சீமானுக்கு குறுந்தகவலெல்லாம் அனுப்பினார் விஜயலட்சுமி. இதற்கு விளக்கம் தரும் விதத்தில், “காதல் செய்யும் நிலையிலா நான் இருக்கிறேன்?” என்று பொதுவெளியில் சீமான் மறுத்ததும் நடந்தது.

விஜயலட்சுமி கூறிவரும் குற்றச்சாட்டுக்களெல்லாம் உண்மைதானா? நடிகை என்பதால், ஆணாதிக்க உலகில் தொடர்ந்து அவர் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறாரா? இதற்கெல்லாம் சிபிஐ விசாரணையா கோர முடியும்? ஆனாலும், நடிகை என்பதற்காக, அவருடைய புகாரை அலட்சியப்படுத்திவிட முடியாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT