Skip to main content

கீர்த்தி சுரேஷால் ஒரு மணி நேரம் டிராஃபிக் ஜாம்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

 

ker


சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ரசிகர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், பிரபல நகைக்கடை ஒன்றின் புதுப்பொலிவூட்டப்பட்ட ஷோரூம் திறப்பு விழா இன்று (மே 31, 2018) நடந்தது. இந்த கடையின் பிராண்டு அம்பாசிடரும் பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ், ஷோரூமை திறந்து வைத்தார். மேலும், அவருடைய பெயரிலான டிசைன்கள் அடங்கிய நகைக்கூடத்தையும் துவக்கி வைத்தார்.

 

ke s


பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என் பெயரிலான டிசைனில் நகைகள் விற்பனைக்கு வந்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சிதான். என் காலத்திற்குப் பிறகும் அந்த மாடல் நகைகள் இருக்கும் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது,'' என்றார்.

அப்போது அவரிடம், விஜயுடன் நடித்து விட்டீர்கள். அஜித்துடன் எப்போது ஜோடி சேருவீர்கள்? எனக் கேட்டதற்கு, ''அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்,'' என்றார்.


திறப்பு விழாவையொட்டி, நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கீர்த்தி சுரேஷூடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் அவரைக் காணவும், நகைகள் வாங்கவும் கடை முன்பு குவிந்தனர்.

 

kee tr


நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்களுடன் கீர்த்தி சுரேஷ் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 'ரஜினி முருகன்' படத்தில், 'உன் மேல ஒரு கண்ணு...' பாடலில் அவர் விரல்களால் கண்களை லேசாக மறைப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாக விசில் அடித்து தெறிக்கவிட்டனர்.

 

 


ரசிகர்கள் திரண்டதால், ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மேம்பாலம் கட்டுமானப் பணிகளால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

 

k tt


இந்நிலையில், நடிகையைக் காண வந்த ரசிகர்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பேருந்துகள், ஆட்டோக்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

''யாருங்க சொன்னா, நான் இதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்னு'' - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலுருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தன் உடல் எடை மெலிவு குறித்தும் நேற்று அளித்த ஒரு பேட்டியில் பேசியபோது....  

 

keerthy suresh

 

 

''எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் 'நடிகையர் திலகம்' படம் முடித்த பின் ஒரு 5 மாதம் ஓய்வில் இருந்தேன். அந்த சமயம் என்னை பலரும் ஏன் குண்டாக இருக்கிறாய், சப்பியாக இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நானும் சரி இனிமேல் சில காலம் ஒர்கவுட் எல்லாம் செய்து பார்ப்போம் என ஆரம்பித்து 5, 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன். அதன் பலன்தான் நான் இருக்கும் தற்போதைய தோற்றம். யார் கிளப்பிவிட்டாரகள் என தெரியவில்லை. நான் எந்த படத்திற்காகவும் என் உடலை குறைக்கவில்லை. சொல்லப்போனால் சில தமிழ் படங்களுக்காக என்னை அணுகிய சிலர், இன்னும் கூட வெய்ட் போட சொல்கிறார்கள்'' என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது ஏன்...? தேர்வுக்குழு சொன்ன அசத்தல் காரணம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Keerthy

 

 

இதில் சிறந்த நடிகைக்கான விருதை ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில், பலவிதமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக' இந்த தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.