செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குஷ்பு லேசான காயம் அடைந்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "என் கணவர் வணங்கும் தெய்வம் எங்களைக் கைவிடவில்லை. கடவுள் முருகன்தான் என்னை காப்பாற்றியுள்ளார். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடவுள் முருகன்தான் எங்களை காப்பாற்றியுள்ளார் -குஷ்பு
Advertisment