Advertisment

"நீங்கள் யார் என்னை நீக்குவதற்கு... நானே வெளியேறுகிறன்" - குஷ்பு தடாலடி!

jk

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பு தற்போது அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவந்த நடிகை குஷ்பு, கடந்த 2010ம் ஆண்டு தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு தி.மு.கஅப்படியான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்துவந்த அவர், சில ஆண்டுகள் இடைவெளியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு செய்தித்தொடர்பாளர் என்ற முக்கிய பொறுப்பை பெற்று பணியாற்றி வந்தவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனாலும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

Advertisment

இதனால் அவர் வருத்ததில் இருந்ததாகக் கூறப்படுகிடுகிறது. இந்நிலையில், அவர் பா.ஜ.க.வில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் இன்று பா.ஜ.க.வில் இணைவதாக தகவல் வெளியான நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், "நானே அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறேன், என்னை காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் முடக்கப் பார்த்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe