Skip to main content

நடிகர் பிரகாஷ்ராஜூக்கு கஸ்தூரி அதிரடி பதில்!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

நேற்று சினிமா பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி  பிடி.செல்வகுமார் கூறியபடி தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமை வி‌ஷயத்தில் வேறு மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்ள முடியாது.இந்த கருத்து பிரகாஷ்ராஜ், கெஜ்ரிவால் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. 

 

kasthuri



தொடர்ந்து பேசிய கஸ்தூரி  மே23-க்கு பிறகு தமிழ்நாடு தான் கிங் மேக்கராக இருக்கப்போகிறது. அதைத் தெரிந்து கொண்டு தான் கன்னடர்கள் சின்ன சின்ன வி‌ஷயங்களுக்காக பேச ஆரம்பித்துள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள். தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள் மற்றும் வெற்றியும் பெறுகிறார்கள் என்று கூறினார் கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பாகியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
sayaji shinde admitted to hospital

மராத்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழில் 'பாரதி' படத்தில் சுப்ரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும், 'தூள்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார். 

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதற்காக 2015 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி தேவ்ரையின் என்ற அமைப்பை ஏற்படுத்தி பசுமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இது அவர் தற்போது வாழ்ந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் ஷாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரா சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் ஒரு சில அடைப்புகள் இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நலமுடன் இருப்பதாக அவரே மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Next Story

பிரபல நடிகரை மணக்கும் அபர்ணா தாஸ்?

Published on 03/04/2024 | Edited on 05/04/2024
aparna das get to married deepak parambol

2019 ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணா தாஸ். கேரளாவை சேர்ந்த அவர் அடுத்த படமாகவே தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமாக உருமாறினார். பின்பு தமிழில் கவினுக்கு ஜோடியாக நடித்த டாடா படம் அடுத்தகட்டத்திற்கு அவரை அழைத்து சென்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக மாற்றியது. 

இதனிடையே தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆதிகேஷவா படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இப்படி மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்து வரும் அபர்ணா தாஸ் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் தீபக் பறம்போலை நீண்ட நாள் காதலித்து வந்ததாகவும் ஏப்ரல் 24ஆம் தேதி அவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கேரளாவின் வடக்காஞ்சேரியில் நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

aparna das get to married deepak parambol

மலையாள படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபக் பறம்போல், விஸ்வ விக்யாதரய பையன்மார் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து லவ் ஆக்‌ஷன் ட்ராமா, ஹெவன், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியாகி மலையாளத் திரையுலகில் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார். இருவரும் மனோகரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இருவருக்கும் திருமண நடக்கவுள்ளதாக சொல்லப்படும் தகவல் வைரலாக பேசப்படும் நிலையில், இருவர் தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தீபக் பறம்போல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஜோடியாக வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிலும் ஏப்ரல் 24 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.