Advertisment

நடிகை சித்ராவின் கணவருக்கு வழங்கிய பிணையை ரத்துச் செய்யக்கோரி அவரது நண்பர் மனு! 

Actress Chitra's friend Manu wants to cancel the bail given to her husband!

Advertisment

சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கியது. இதுபோன்ற சூழலில், ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டி, அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஹேம்நாத் தனது நீண்ட கால நண்பர் என்பதும், அவர் சித்ராவுக்கு அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறையின் விசாரணையின் போது தான் சாட்சியம் அளித்ததாகவும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால், அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் என ரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

இந்த மனுவை இன்று (20/07/2022) விசாரித்த நீதிபதி ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

order
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe