Skip to main content

குஷ்பு பங்கேற்ற விழா மேடையில் தலைக்கு மேலேயே சுற்றிய நாற்காலி!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

ACTRESS AND BJP LEADER KUSHBOO PUDUKKOTTAI PARTY FUNCTION

நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தற்போது 'பொங்கல் விழா' என்ற பெயரில் தேர்தல் முன் பரப்புரையைத் தொடங்கியுள்ளார். 

 

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜ.க.வின் பொங்கல் விழா சனிக்கிழமை (09/01/2021) நடந்தது. இந்த விழாவில் குஷ்பு பங்கேற்கிறார் என்ற தகவல் பரவியதும் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் குவிந்திருந்தனர். 

 

இந்த நிலையில் குஷ்பு வரும் முன்பே பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. விழா மேடையில் ஏராளமான பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தது. குஷ்பு வந்ததும் கீழே நின்ற கட்சிக்காரர்களும் மேடை ஏற முயன்றனர். அந்தக் கூட்டத்திலிருந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க பெண் போலீசார் வளையம் அமைத்தனர். அப்படியும் பலர் போலீசாரை தள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது குஷ்புவோடு புரட்சிக்கவிதாசன் மற்றும் மாவட்டத் தலைவர் ஆகியோரையும் அமர வைக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்பு கருதிச் சேர்களை அகற்றும்படி போலீசார் சொன்னார்கள். அதனால் குஷ்பு நின்ற மேடையிலிருந்து எடுக்கப்பட்ட சேர்கள் அவரது தலைக்கு மேலேயே நீண்ட நேரம் சுற்றியது. ஒரு கட்டத்தில் அவரது தலையில் இடித்துவிடுமோ என்ற நிலையில் இருந்தது.

ACTRESS AND BJP LEADER KUSHBOO PUDUKKOTTAI PARTY FUNCTION

விழாவில் பேசிய குஷ்பு, "உங்களை சந்தப்பது மகிழ்ச்சியாக இருக்கு. பொங்கல் முடிஞ்சதும் நமக்கு நிறைய வேலை இருக்கு. இப்போது ஒவ்வொரு தெருவிலும் பா.ஜ.க. கொடிப் பறக்கிறது. இதுக்கு காரணம் பிரதமர் மோடி தான். பா.ஜ.க.வை பார்க்க முடியாதுனு சொன்னவங்க இன்று பயப்படுறாங்க. தமிழகத்துல யாருமே பார்க்க முடியாத வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைக்கப் போகுது. இந்த வெற்றி பா.ஜ.க. வெற்றி இல்லை; உங்கள் வெற்றி. பிரதமர் மோடியை நம்பி ஓட்டுப் போடப் போறீங்க. ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தது பா.ஜ.க. தான். நீங்க அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

ACTRESS AND BJP LEADER KUSHBOO PUDUKKOTTAI PARTY FUNCTION

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, "முதல்வர் பழனிசாமியை நாங்க ஏற்கவில்லை என்று சொல்லவில்லை. எங்கள் தலைமை அறிவிக்கும். எனது அரசியல் ஆசான் கலைஞர்; தி.மு.க. என்று சொல்லவில்லை. கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க. இப்போது இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்காரங்க யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.