பாஜகவில் நடிகர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் அதற்கான வேலைகள் சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. பா.ஜ.கவை பொருத்த வரையில், அக்கட்சித் தலைமை, பிரபலங்களைக் கட்சியில் தொடர்ந்து சேர்த்து வருகிறது. காயத்ரி ரகுராமில் ஆரம்பித்து இன்று குஷ்பு வரை தொடர்ந்து அக்கட்சியில் இணைந்து வருகிறார்கள். இன்னும் சில நடிகர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.கவை விமர்சனம் செய்து சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "பா.ஜ.க, நடிகர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் காணாமல் போவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.