நகைச்சுவை நடிகரான விவேக், சினிமாவில் லஞ்சம், அரசியல் ஊழல், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதை வழக்கமாகக் கொண்டவர். அதனால்தான், ஜனங்களின் கலைஞர், சின்னக் கலைவாணர் போன்ற பட்டங்கள் இவரைத் தேடிவந்தன. இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருக்குக் கிடைத்தது.

Advertisment

vivek

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பசுமை கலாம் என்ற திட்டத்தின் மூலம், தமிழகத்தில் மரக்கன்றுகள் நடும் சேவையில் தன்னை ஈடுபடுத்திவரும் நடிகர் விவேக், சினிமா தியேட்டர்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில், விவேக் குறித்து அரசியல் ரீதியாக வதந்தி ஒன்று பரவ, தனது ட்விட்டரில் இவ்வாறு அவர் மறுத்திருக்கிறார்.

Advertisment

‘இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதைச் செவ்வனே செய்வேன். அனைத்துக் கட்சியினர், தலைவர்கள், என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.’ என்கிறார்.

ரஜினியோ, கமலோ யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், வந்தபிறகு, நூறு சதவீத அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் முன்பு கருத்து சொன்ன விவேக், இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.