Advertisment

சாவியை வைத்து பூட்டை திறக்க முடியாது, பூட்டை உடைத்தே தீருவேன்... விஷால் ஆவேசம்

actor vishal arrested

நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வந்த விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனை வரும் என்று போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதன்படி வந்த நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்றார். அப்போது, போலீசார் அவரை தடுத்தனர். பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்களுடன் விஷால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சட்டவிரோதமாக போடப்பட்ட பூட்டை அகற்ற எங்களுக்கு பாதுகாப்பு தருவதை விட்டுவிட்டு இப்படி தடுக்கிறீர்களே என ஆவேசமுடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சாவியை வைத்து பூட்டை திறக்க முடியாது, பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் கூறினார்.

ஆனால் போலீசார் பத்திர பதிவு துறையினர் பூட்டை அகற்ற வருகின்றனர். நீங்கள் அவர்களிடம் பேசி கொள்ளுங்கள். இப்போது சம்பவ இடத்தை விட்டு நகருங்கள் என எச்சரித்தனர். விஷால் மற்றும் அவருடன் வந்தவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

arrest vizhal actor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe