ADVERTISEMENT

நடிகர் விஜய் சேதுபதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

10:46 PM Dec 14, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெங்களூரு விமான நிலையம் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மகா காந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 2- ஆம் தேதி அன்று இரவு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை எதேச்சையாக சந்தித்ததாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முற்பட்ட போது, தன்னை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தியதாகவும் மகா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், ஆனால் விஜய் சேதுபதியை தான் தாக்க முற்பட்டது போல அவதூறு பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனவரி 4- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக, நடிகர் விஜய்சேதுபதிக்கும், அவரது மேலாளர் ஜான்சனுக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று (14/12/2021) உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT