நடிகர் விஜய்5 மாவட்டங்களைச் சேர்ந்தவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைஅண்மையில் சந்தித்து இருந்தார். இந்த நிகழ்வின் போது கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்திருந்ததாகக் கூட போக்குவரத்துகாவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அப்படி பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிர்வாகிகள் சந்திப்பிற்குப் பிறகு இன்று மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்கஇருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை அரியலூர் ,பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.