Skip to main content

ரிங்டோன்தான் ரெய்டுக்கு காரணமா? அன்புச்செழியன் வீட்டில் ரெய்டுக்கு காரணம் என்ன? சமூக வலைதளத்தில் பரவும் தகவல்கள்...

Published on 07/02/2020 | Edited on 08/02/2020

 

அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த சோதனை தமிழ் திரைப்படத்துறையிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

vijay




இந்த நிலையில் இந்த சோதனை குறித்து சமூக வலைதளத்தில் பலர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் எதிராக வாக்களித்தால் தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பதவி பறிபோகும். அப்போது தனக்கு பதவி முக்கியம் அல்ல, கட்சிதான் முக்கியம் என ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவார். அதற்கு பின்புலமாக பொருளாதார உதவிக்காக அன்புச்செழியன் இருப்பார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்தினால், ஓ.பி.எஸ்.க்கு அவர் உதவ மாட்டார் என்றுதான் இந்த ரெய்டு நடந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.
 

இன்னொரு தரப்போ, ரஜினி தனது வீட்டின் முன் பேட்டி கொடுக்கும்போது ஒரு செய்தியாளரின் செல்போனில் அழைப்பு வரும். அந்த அழைப்பால் ரஜினி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்தார். அந்த அழைப்பு விஜய் பாடலின் ரிங்டோனாக இருந்ததால்தான் விஜய் வீட்டுக்கு ரெய்டு நடத்த அதிகாரிகள் சென்றதாக கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.


 

 

மேலும் ஒரு சிலரோ, ரஜினிக்கு போன் போட்ட விஜய், ஏங்கன்னா எங்க ரிங்டோன் வந்தா ரெய்டு வருமான்னா என்று கேட்க, அதற்கு ரஜினி, தம்பி வருமான வரியை ஒழுங்கா கட்டினீங்கன்னா, எந்த பிரச்சனையும் வராது என்று பதில் சொல்வது போல் பதிவிட்டுள்ளனர்.
 

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில், பொதுமக்கள் பலர் அதில் கையெழுத்திட்டு வருகின்றனர். திமுகவும் பலரை கையெழுத்துப்போட ஒவ்வொரு வீதியாக செல்கிறது. அந்த வகையில் விஜய் இந்த கையெழுத்து இயத்தினரிடம் கையெழுத்து போட இருப்பதாக செய்திகள் வெளியானதால், பாஜக இந்த ரெய்டு விட்டிருப்பதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.