Skip to main content

சூரியிடம் கறிச்சாப்பாடு கேட்ட சிவகார்த்திகேயன்! -மதுரையில் சுவையான பேட்டி!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

மதுரை அவனியாபுரத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் புதிய உணவகத்தை திறந்து வைத்துவிட்டு மைக் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன், செய்தியாளர்களையும் சந்தித்தார். “இதை என்னோட குடும்ப நிகழ்வாத்தான் பார்க்கிறேன். மதுரைக்கு எப்ப வந்தாலும் ஒரு சூப்பரான மாஸான வரவேற்பு இருக்கும். அது ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. அது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கிறது. நான் சூரியண்ணன் கிட்ட சொன்னேன். வெஜிடேரியன் ரெஸ்டாரெண்ட். அம்மன் ஓகெ. மதுரைல இருந்துக்கிட்டு நான்- வெஜிடேரியன் ஹோட்டல் வைக்கலைன்னா எப்படிண்ணே? அசைவ சாப்பாடு சாப்பிடணும்ல. 

actor soori open the new restaurant madurai


கறி சாப்பாடு போடுங்கண்ணேன்னு கேட்டேன். இப்ப அதுவும் ஆரம்பிச்சிட்டாரு. அவரு வருஷ வருஷம் வெவ்வேறு ஏரியாக்கள்ல பிராஞ்சுகளை தொடங்கிட்டே இருக்கணும். நான் வந்து திறந்து வச்சிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படறேன். இது நடக்கும். போனவாட்டி நடந்தப்ப அன்னைக்கி சொன்னேன். அவங்க இன்னைக்கு நிகழ்த்திக் காட்டிட்டாங்க. இது அவங்களோட கடுமையான உழைப்புத்தான். ஒரு  டீ கடை வச்சி.. அது பல டீ கடைகளா மாறி.. அதுக்கப்புறம் வெஜிடேரியன் ரெஸ்டாரெண்டா மாறி..

actor soori open the new restaurant madurai

 

இப்ப நான்-வெஜ் ரெஸ்டாரெண்டா மாறுதுன்னா... உழைப்பு இல்லாம சாத்தியமே இல்ல. உழைக்கிறோம்;  என்னைக்குமே நீங்க (ரசிகர்கள்) தூக்கிவிடாம விட்டதே இல்ல. இந்த மேடைல இருக்கிற நாங்க எல்லாருமே அப்படித்தான். உங்களோட கைதட்டல்கள்ல வந்தவங்கதான். அடுத்த வருஷம் இன்னொரு பிராஞ்சு அண்ணே. இடத்தைப் பார்த்து வைங்க. டேட் சொல்லிருங்க. வந்துடறேன். இந்த விசிலுக்கும் கைதட்டலுக்கும் பெரிய நன்றி.” என்றார் சிரித்த முகத்துடன்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.