திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் சென்று நலம்விசாரித்து வருகின்றனர்.

Advertisment

senthil

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறைத்து விசாரிக்க நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் மயில்சாமிஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். செயல்தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் பற்றி விசாரித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் செந்தில் பேசுகையில்,

திமுக தலைவர்கலைஞர் என்மீது தனி பாசம் கொண்டவர், அவரது கதைவசனத்தில் இரண்டு படங்கள் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எம்.ஜி.ஆர் ஆதரவாளன் என தெரிந்தும் எனக்கு காமெடி நாயகன் விருது வழங்கினார். யாராக இருந்தாலும் ஒரேமாதிரிஉபசரிப்பது அவரது பண்பு. கட்சி கொள்கையில் எப்படி வேண்டுமானாலும் யார் யாரோ எப்படியோ இருக்கலாம் ஆனால் கலைஞரை யாரும் வெறுக்கமாட்டார்கள். அவர் விரைவில் நலம் பெறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisment