Skip to main content

நடிகர் ராமராஜன் நாமராஜன் ஆனார்... 

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

நடிகர் ராமராஜன் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு வீடியோ. அந்த வீடியோ கிட்டதட்ட 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் ராமராஜன் என்பதற்கு பதில் நாமராஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

actor ramarajan



அந்த வீடியோ காட்சியில் இயேசுவின் சமாதானம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, என்னடா கரக்காட்டக்காரன்ல மாங்குயிலே பூங்குயிலேன்னு பாடிக்கிட்டு இருந்தவன், கோயம்பத்தூரில் வந்து இயேசுன்னு பேசுறான்னு நினைப்பீங்க. வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்வது பெரிய பாக்கியம். எனக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர். அங்கே பிறந்து வளர்ந்து திரையரங்கில் வேலை பார்த்து மெட்ராஸ் வந்து எல்லோருக்கும் தெரியும் விதமாக நடிகராக ஆனேன். அரசியலில் ஈடுபட்டு எம்பி ஆகி நல்லா வந்துகிட்டு இருந்த நேரத்தில் சோதனை வந்தது. எல்லோருக்கும் சோதனை வரும். அப்படித்தான். 2010ல் ஒரு இடத்திற்கு காரில் போய்க்கொண்டிருந்தபோது மிகப்பெரிய கார் விபத்து. அந்த விபத்தில் எனது நண்பர் ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிட்டதட்ட 15 நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். இவர் பிழைப்பாரா பேசுவாரா, பழைய நினைவு வருமா என்று என்று எல்லோரும் பேசியது எனக்கு பிறகுதான் தெரியும். 

 

அப்போது எனது நண்பர் பால் தங்கராஜ் இயேசுவை வழிபடக்கூடியவர். அவர் என்னை ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொண்டார். நான் என்னவே புலம்பிக்கொண்டிருந்தேன். அப்ப அவர் சொன்னார், தைரியமாக இருங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் ஒரு பாஸ்டரை கூட்டிட்டு வரேன்னு சொல்லி, அப்புறம் ஒரு பாஸ்டர் என் தலையில் கை வைத்து ஜபம் பண்ணும்போது எனக்கு இயேசுவே என் தலையில் கையை வைத்து பார்த்த மாதிரி தோன்றியது. இன்றைக்கு நான் நல்லா இருக்கேன். எல்லா இடத்திற்கும் போறேன் என்றால் அது இயேசுவின் கருணைதான். மனசார நினைத்து இயேசுவே என்று சொன்னால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் நம்முடன் இருப்பவர் கர்த்தர் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.