Skip to main content

“ரஜினி யாருக்காக இதைச் சொல்கிறார்?”- பா.ஜ.க. சீனிவாசனின் சந்தேகம்!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரத பண்பாட்டு கழகம் சார்பில், பாரதமாதா குடமுழுக்கு விழா மற்றும் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  


“புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன், பஞ்சமி நில விவகாரத்தில் திமுக எதிர்ப்பு நிலையைக் கையாண்டவர். பட்டியலின சமுதாய நலனில் அக்கறை கொண்டவர். 2021 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்து வெற்றி பெறுவோம். குடியுரிமைச் சட்ட ஆதரவு நிலைப்பாட்டால் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 

actor rajinikanth bjp seenivasan ask in virudhunagar function

முருகன், தகுதி வாய்ந்தவர்; திறமை வாய்ந்தவர்; பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட இல்லாத சமூக நீதியை, அதனைக் காக்கும் வேலையை பாஜக செய்துள்ளது. இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால், உயர் ஜாதியினர் மட்டும்தான் பாஜகவில் வளர முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பொய்யாகிவிட்டது.


காஞ்சி சங்கர மடத்தில் தாழ்த்தப்பட்டவர் தலைவராக முடியுமா என்று கேட்கும் திமுகவில் தற்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வர முடியுமா? பாஜக-வை பொறுத்தவரையிலும், சமூக நீதி மட்டுமல்ல, சுமூக நீதியும் வேண்டுமென செயல்படுகிறோம். தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். அவருடைய கருத்து பா.ஜ.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல.  பா.ஜ.க.விலும் கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை என்றே உள்ளது.  

actor rajinikanth bjp seenivasan ask in virudhunagar function

ரஜினிகாந்த் யாருக்காக இதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் தேச பக்தி கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால்,  அவர் என்ன கொள்கை வைத்திருக்கிறார் என்பது தெரிந்தபிறகே அவரைப் பற்றி கூற முடியும்.  
 

ரஜினிகாந்த் தமிழர் இல்லை அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றெல்லாம் பேசுவது சரியல்ல. எம்.ஜி.அரும் ஜெயலலிதாவும் தமிழர்கள் இல்லை. ஆனால், அவர்களை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார்கள் மக்கள். யாரை மக்கள் ஏற்கிறார்களோ, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். 

actor rajinikanth bjp seenivasan ask in virudhunagar function

திமுகவும்  சீமான் போன்றவர்களும் ஒருவரின் பிறப்பை எதிர்க்கிறார்கள். பிறப்பை வைத்து, தமிழர்களின் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.  தமிழர்கள் மகாராஷ்டிராவில் எம்எல்ஏ ஆகி உள்ளனர்.  சிங்கப்பூரில் எம்.பி.க்கள் ஆகி உள்ளனர். கூகுள் சிஇஓ ஒரு தமிழர். உலகம் முழுவதும் தமிழர்கள் கோலோச்சுகின்றனர். இப்படியிருக்கும்போது, திமுகவினரும், சீமான் போன்றவர்களும் இப்படி பேசுவது தவறு.  


இஸ்லாமியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என ஸ்டாலின் சொல்லியிருப்பது தவறான வழிகாட்டுதல் ஆகும். இதுதான் மதவாதம். கணக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் பாஸ்போர்ட் பெற இயலாது. இஸ்லாமியர்கள் வெளிநாடு செல்வதை எதிர்க்கிறாரா ஸ்டாலின்? ரேசன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது.  ஸ்டாலின் சதி செய்கிறார். முதலில் திமுகவினர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கூறட்டும். ஸ்டாலின் இப்படி பேசியது கண்டிக்கத்தக்கது.” என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.