Skip to main content

ரஜினிகாந்த் பிறந்தநாள்: வெங்காயம் கொடுத்து கொண்டாடிய ரசிகர்கள்!

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த விலை கிடைக்கவில்லை என்பது தான் வேதனை.
 

தற்போது இந்தியா முழுவதுமே வெங்காயத்தை வைத்தே அரசியல் மட்டுமின்றி குடிநீர் குழாயடியிலும், டீ கடைகளிலும் கூட பேசப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சில கடைகளும் ஒரு பொருள் வாங்கினால், வெங்காயம இலவசம் என்று சொல்லி விளம்பரங்களும் செய்து கொள்வதுடன் செய்திகளாகவும் வெளிவருகிறார்கள். பல இடங்களில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே, வெங்காய மாலைகள் என்ற பரிசுகளும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

actor rajini kanth birthday celebration with onion pudukkottai district keeramangalam

இந்த நிலையில் தான் டிசம்பர் 12 ந் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மகளிரணி சார்பில் முன்னதாக கொண்டாட திட்டமிட்டனர். 
 

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னால் கூடிய ரசிகர்கள் பிரமாண்ட சிவன் சிலை முன்பிலிருந்து தலைமைப் புலவர் நக்கீரர் சிலை அமைந்துள்ள நடைபாதை வழியாக பூ, பழம், இனிப்புகளுடன் வெங்காயத்தை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சென்று மெய்நின்றநாதர், ஒப்பிலாமணி அம்பிகைக்கு ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கி பிறந்த நாளை கொண்டடினர். 

actor rajini kanth birthday celebration with onion pudukkottai district keeramangalam

இது குறித்து மாவட்டப் பொறுப்பாளர் ஏ.பி.டி சகாயம் கூறும் போது, "தலைவர் ரஜினி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டோம். வழக்கம் போல கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து இனிப்பு வழங்கி கொண்டாடுவது போல, இந்த ஆண்டும் இனிப்புகளுடன் வந்தோம். ஆனால் தற்போது வெங்காயத்திற்காக மக்கள் படும் அவதியைப் பார்த்து இனிப்புகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கலாம் என்று வெங்காயத்தையும் சேர்த்து வழங்கினோம். 

actor rajini kanth birthday celebration with onion pudukkottai district keeramangalam

பொதுமக்களும் இனிப்புகளை விட வெங்காயத்தை முதலில் எடுத்துக் கொண்டனர். மேலும் இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான வெங்காயத்தை வழங்கி தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.