Skip to main content

சர்ச்சைக்குள்ளான நடிகர் பிரித்விராஜ் ட்வீட்... போராட்டத்தில் இறங்கிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 140 அடியை நெருங்கிக்கொண்டு வருகிறது. அதைக் கண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, அணையின் நீர் உயர்ந்துவருவதால் அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தநிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

 

அதாவது 125 ஆண்டுகளுக்கு மேலான பழமையான முல்லைப் பெரியாறு அணை இருந்துவருவதால் அதை உடைக்க வேண்டுமே தவிர, ஆய்வு பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றொரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதைக் கண்ட கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் ஜெயராம், திலீப் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் நடிகர் பிரித்விராஜ்க்கு ஆதரவாக முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுசெய்தனர். அதுபோல் தமிழ் நடிகரான விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கேரளா ரசிகர்களும் முல்லை பெரியாரை இடிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

இது இந்திய அளவில் வைரலாக பரவி முல்லைப் பெரியாறுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரவிவருகின்றன. அதேபோல், கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சு மலையாளிகள் மத்தியில் பரவலாகவே இருந்துவருகிறது. கேரள முன்னணி நடிகரான பிரித்விராஜின் இந்தச் செயலால் கேரளாவிலுள்ள பிரபல நடிகர்களின் ரசிகர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்துவருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் உட்பட தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் என பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில்தான் அகில இந்திய ஃபார்வர்ட் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ் உருவ பொம்மையை எரித்து கண்டன குரல் எழுப்பினர். அது மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை நிறுத்துவோம் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நடிகர் பிருத்விராஜை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அதோடு அணைக்குத் தமிழ்நாடு போலீஸ் அல்லது மத்திய போலீசை பாதுகாப்பு பணியில் போட வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகிறார்கள். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்ததைக் கண்டு தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவுசெய்து, ‘முல்லை பெரியாறு அணையை தொடர்ந்து பாதுகாப்போமே தவிர அணையை இடிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதோடு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் உட்பட தென்மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.