Advertisment

நடிகர் பார்த்திபன் மீது பாடலாசிரியர் போலீசில் புகார்!

இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன், தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக திரைப்பட பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Advertisment

சென்னை கே.கே.நகரில் முன்பு பார்த்திபன் அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் ‘கவிஞர் கிச்சன்’ என்ற பெயரில் ஜெயங்கொண்டான் ஓட்டல் நடத்தி வந்தார். திரைப்படங்களில் பாடல்களும் எழுதி வந்தார். பார்த்திபனின் கோடிட்ட இடங்களில் நிரப்புக படத்திலும் நடித்துள்ளார். இவரின் ஓட்டலுக்கு பார்த்திபன் அடிக்கடி சாப்பிட வந்துள்ளதாகசொன்ன ஜெயங்கொண்டான், பார்த்திபனிடமே உதவியாளராக சேர்ந்துள்ளார். பார்த்திபனின் அலுவலகம் மற்றும் வீடு தற்போது திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகரில் உள்ளது.

Advertisment

p

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இங்கு கொள்ளை சம்பவம் நடந்ததாகவும், 1.5 கிலோதங்கநகைகளைமர்மநபர்கள் திருடிவிட்டனர் என்று திருவான்மியூர் போலீசில் பார்த்திபன் புகார் அளித்திருந்தார். பார்த்திபன் வீட்டில் வேலை செய்பவர்கள், டிரைவர்கள் என எல்லோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

k

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருட்டுக்கு காரணமானவர்கள் யார் என்று இதுவரை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், திருட்டுக்கு காரணம் காட்டி ஜெயங்கொண்டானை பார்த்திபன் வேலையை விட்டு நிறுத்திவிட்டார். தன்னை வேலையில் இருந்து ஏன் நிறுத்தினீர்கள் என்று நியாயம் கேட்பதற்காக சென்றபோது நடந்த பிரச்சனையில் ஜெயங்கொண்டானை அலுவலகத்தின் மாடியில் இருந்து பார்த்திபன் தள்ளிவிட்டதாகவும்நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயங்கொண்டான் புகார் அளித்துள்ளார்.

parthipan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe