ADVERTISEMENT

நடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்!!

09:27 PM Dec 15, 2018 | paramasivam

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் இன்று அக்கட்சியை கலைத்துவிட்டு புதிய அரசியல் கட்சி தொடங்கினார். இன்று இரவு சுமார் 8 மணி அளவில் நெல்லையிலுள்ள ஏஆர்ஆர் மஹாலில் நடிகர் கார்த்திக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தற்போது மனித உரிமை காக்கும் கட்சி என்கிற புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நடிகர் கார்த்திக் அதனுடைய கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் இனிமேல் நான் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன். தேர்தல் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தூத்துக்குடி ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.இந்நிகழ்ச்சியின் போது குவைத் குமார் மற்றும் கார்த்திக்கின் தோழர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT