Activities of the power sector - Chief Minister MK Stalin discussion

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எரிசக்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் காவல்துறை இயக்குநர் (விழிப்புப்பணி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment