Skip to main content

“தரச்சான்று இல்லாமல் செயல்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

 Action will be taken against private milk companies operating without certification Minister Mano Thangaraj

 

தரச்சான்று இல்லாமல் செயல்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் வல்லகுளம், வேப்பங்குடி, திருமலைரெட்டிபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் நடைபெற்று வரும் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கரூர் மாவட்டத்தில் மாடு வளர்ப்பதற்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. 1 கோடியே 4 லட்சம் மதிப்பில் 4 குளிரூட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.3.50 கோடி மதிப்பில் பால் பண்ணை அமைக்கப்படுகிறது. ஆவின் பால் வரும் பாக்கெட் தடைசெய்யப்பட்ட தரமற்ற பாலித்தீன் பொருள் இல்லை. இருப்பினும் கோரிக்கையை ஏற்று பாட்டில் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க கடந்த மாதம் 5000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

 

ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பெருகி உள்ளது. அரசு நிறுவனத்தில் தரம் குறைந்த பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாது. தனியார் நிறுவனங்களுக்கு சளித்ததல்ல ஆவின் நிர்வாகம். மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க கடந்த மாதம் 5000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு என்பது தவறான தகவல். தரமான பால், கலப்படம் இல்லாமல் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்கள் நல்ல தரம், விலையும் நியாயமாக உள்ளது. முறையான தரச்சான்று இல்லாமல் விற்கப்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.