Skip to main content

சட்டப் படிப்புகள் தொடங்க நடவடிக்கை - அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் முருகேசன்

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் முருகேசன் கூறியுள்ளார். 
 

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வி.முருகேசன் இன்று பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், 

பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் ஊழியர்கள் ஆசிரியர்கள் பிரச்சனையில் முழு கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும்.
 

மேலும் பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பு தொடங்க விரைவில் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வகுப்பு நேரத்திலே பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க கேம்பஸ் இன்டரிவ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நான் துணைவேந்தர் என்று சொல்வதற்கு பதில் ஆசிரியர் என்று சொல்லி கொள்ளவே விரும்புகிறவன். எனவே வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த உள்ளேன். அதே போல் ஆசிரியர்கள், ஊழியர்கள் அவர்களது வேலையை தவறாமல் செய்யவேண்டும். மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அதே போல் மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

 

Action to start legal studies at Annamalai University


 

இங்குள்ள பிரச்சணைகளை போக்கும் விதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் உலக நாடுகளின் பல இடங்களில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து சில உதவிகளை பெற்று பல்கலைக்கழகத்தை மேம்படுத்தப்படும். அதேபோல் மத்திய அரசிடம் ஆராய்ச்சிக்கான நிதிபெற்று ஆராய்ச்சி மாணவர்களை அதிகளவில் உருவாக்கப்படும், தொழில்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார். இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், கல்விக்குழு உறுப்பினர் திருவள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.