மீனவர்களை விடுக்க நடவடிக்கை தேவை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்!

Action needed to release fishermen: Tamil Nadu Chief Minister urges Union Foreign Minister!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (19/12/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (19/12/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fisherman Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe