Skip to main content

“காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - கிராம மக்கள் கோரிக்கை!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

"Action must be taken to protect the forest" -Village people demand

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி காடுகள் உள்ளன. பரந்து விரிந்த இந்தக் காட்டில் லட்சக்கணக்கான மரங்கள் இருந்தன. இந்தக் காடுகளின் மூலம் தச்சன்குறிச்சி, குமுலூர் ரெட்டி, மாங்குடி, புதிய உத்தமனூர், சிறுகனூர், மயிலம்பாடி, கண்ணாடி, கல்பாளையம், புறத்தாக்குடி, கொளக்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். வானம் பார்த்த பூமியான தச்சன்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்கள் என்பது மிகவும் குறைவு.

 

முந்திரி பழ சீசன் காலமான பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கிராம மக்கள் பழத்தைப் பறித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். லட்சக்கணக்கான முந்திரி மரங்கள் இருந்த காட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையான மரங்களே உள்ளன. காட்டில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர்வாரி, மழை நீரை சேமித்தால் முந்திரி மரங்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்படாது. மேலும், சிலர் காடுகளை அழித்துவருவதால் காடுகளில் உள்ள மான், காட்டுப்பன்றி, குரங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

 

எனவே வனத்துறையினர் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏரிகளைத் தூர்வாரி கூடுதலாக மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “சொட்டு நீர் பாசனம் மூலம் காடுகள் பல்வேறு ஊர்களில் தொடங்கப்பட்டு 100 நாள் வேலை திட்டம் மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மூங்கில் காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.