Skip to main content

முதல்வர் உத்தரவின்பேரில் ஐந்தே நிமிடத்தில் நடவடிக்கை... மகிழ்ச்சியில் பள்ளி முதல்வர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்பட்டுவந்தது. இந்தப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து கடந்த 1999 ஆண்டு வரை குத்தகை எடுத்து  நிர்வகித்துவந்தனர். 1999க்கு பிறகு மாத வாடகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் கட்டி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நஷ்டத்தில் இயங்கியதால், கடந்த ஆட்சியில் பள்ளியின் அனுமதியை நிறுத்திவைத்தனர். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் பள்ளியை மீண்டும் இயக்க அனுமதி தராததால் பள்ளி சில ஆண்டுகளாக மூடியே கிடந்தது. 

 

இத்தகவல் தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு செல்ல, அரசே பள்ளியை ஏற்று நடத்தும் என அறிவித்தார். இதனையொட்டி முதல்வரின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வி ஆணையர், அறநிலையத்துறை ஆணையர்  ஆகியோர் நேற்று (15.06.2021) மாலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டுப் பள்ளியை மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தைக் கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் அமைச்சர். பின்னர் பள்ளியின் சாவியை முதல்வர் நிர்மலா கௌரியிடம் ஒப்படைத்தார்.

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் குத்தகையின் அடிப்படையில் கலவலகண்ணன் செட்டி சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் சீதா கிங்ஸ்டன் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுவந்தது. இந்தப் பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து, வாடகை பணத்தைச் செலுத்த முடியாமல் பள்ளியின் நிர்வாகம் இருந்து வந்தது. அதன் அடிப்படையில்  78 சட்டப்பிரிவின்படி இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த சென்ற ஆண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து ஓராண்டு பள்ளியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

 

அந்த ஓராண்டு முடிவுற்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சாரிடபுள் டிரஸ்டை அணுகி பேசினோம். அப்போது தங்களால் தொடர்ந்து பள்ளியைத் தொடர முடியாத சூழ்நிலையையும் பொருளாதார நெருக்கடியையும் கருத்தில்கொண்டு பள்ளியை அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறினர். இந்தப் பள்ளியிலே 750 மாணவச் செல்வங்களும், 57 ஆசிரியர்களும் ஊழியர்களும் உள்ளனர். திடீரென்று பள்ளியை நிர்வகிக்க முடியாததால் இதனை முதல்வரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஐந்து நிமிடங்களில் இந்தப் பள்ளியை அரசே எடுத்து நடத்தும் என்று கூறியதை ஏற்று, இந்தப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள் சார்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை மன மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

பள்ளியைப் பற்றி கூறும்போது சொல்வார்கள், ஓராண்டு பலன் வேண்டுமா நெல்லை நட வேண்டும், பத்தாண்டு பலன் வேண்டுமா அதற்கு மரத்தை நட வேண்டும், நூறாண்டு பலன் வேண்டுமா அதற்கு கல்வியைத் தர வேண்டும் என்பார்கள். அந்த நூறாண்டு வாழ்கின்ற கல்வியை இந்தப் பள்ளிக்கு முதல்வர் வழங்கியதற்காக மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு முன்னர் இந்தப் பள்ளி சாரிடபுள் டிரஸ்ட் மூலம் எவ்வாறு நடத்தப்பட்டதோ அதேபோன்று தற்போதும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், பள்ளிக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 

 

அந்தவகையில், தேவையான அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு இன்றில் இருந்தே தொடங்கி நிறைவேற்றித் தருவோம். 750 மாணவர்கள் இந்தப் பள்ளியில் தற்போது பயில்கிறார்கள். அடுத்த ஆண்டு இந்த பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்தி, கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்வோம். முழு நேரமும் இந்து சமய அறநிலையத்துறையின் பார்வையும், ஆணையரின் பார்வையும் இந்தப் பள்ளியின் மீது வைத்து, இங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார். அப்போது சாவியைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தக் கண்ணீர்விட்டு தமிழ்நாடு முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்