ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், ரோஜா சமீபத்தில் தனது பிறந்த தினத்தையொட்டி தன்னுடைய தொகுதியில் மலிவு விலை உணவகம் ஒன்றை திறந்தார். அதில் முழு சாப்பாடு ரூபாய் 4-க்கு கொடுத்தார்.
இது அப்பகுதி மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஒரு இட்லி 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நேரத்தில் முழு சாப்பாடு ரூபாய் 4-க்கு கிடைப்பதை மக்கள் பெரியதாக பார்க்கின்றனர்.
ரோஜாவுக்கு எதிராக தேர்தலில் பிரபல நடிகைகளை களம் இறக்க தயாராக இருந்த பிராதன கட்சிகள் தற்போது இவரது அதிரடி நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.