Acid attack on a woman ...

சேலம் நகர பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மீது மர்ம நபர்ஒருவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டநிலையில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் அதுவும் பேருந்து நிலையத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்டவிசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏசுதாஸ் என்பவர் ஆசிட் வீசியது தெரிவந்துள்ளது. தப்பியோடிய ஏசுதாஸைபோலீசார் தற்பொழுதுதேடிவருகின்றனர்.

Advertisment

சேலத்தில் பெண் ஒருவர் மீது பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.