Skip to main content

9 ஆண்டுகளாக தண்ணி காட்டிய குற்றவாளி; ஆந்திராவில் வைத்து தூக்கிய தமிழக போலீஸ் 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

accused who was absconding for 9 years after being out on bail was arrested

 

கடலூர் மாநகராட்சியில் உள்ள புதுப்பேட்டை கான்வென்ட் தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார் 49 வயது அருளரசு. இவருக்கும் தேவனாம்பட்டினம் போட் மேன் தெருவை சேர்ந்த 38 வயது கணேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தனது ஹோட்டலில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு காரில் ஏறி புறப்பட்ட அருளரசை கணேஷ் வழிமறித்துள்ளார்.

 

ஏற்கனவே கணேஷ் மீது காவல் நிலையத்தில் அருளரசு கொடுத்திருந்த புகாரை வாபஸ் வாங்குமாறு கணேஷ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும், வழக்கை வாபஸ் வாங்க அருளரசு மறுத்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியால் அருளரசை சரமாரியாக குத்தினார் சம்படத்திலேயே அருளரசு உயிரிழந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக, கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்  

 

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மூலம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த கணேஷ், அதன் பிறகு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கணேசை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் இருக்கும் இடம் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் கணேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் இதனை நம்பாமல் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

இதற்கிடையே மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களின் முடிக்கமுடியாமல் இருக்கக்கூடிய வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு கூட்டம் ஒன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அருளரசை கொலை செய்த குற்றவாளி கணேஷ் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஆறு மாதமாக கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் கணேஷ் புவனகிரி பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக புவனகிரி சென்ற போலீசார், அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது செல்போன் எண்ணையும் போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கணேஷ் ஆந்திர மாநிலம் நகரியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.  

 

இதனைத் தொடர்ந்து ஆந்திரா விரைந்த போலீசார், கணேஷ் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கடலூருக்கு அழைத்து வந்துள்ளனர். ஜாமீன் பெற்று நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 9 ஆண்டுகளாக கொலை வழக்கில் காவல்துறைக்கு தண்ணி காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் ரகசியமான முறையில் கைது செய்துள்ள சம்பவம், கடலூர் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.