Skip to main content

தோசை மாவு விவகாரம்;ஜெயமோகன் மீது குவியும் கண்டனங்கள்!!

Published on 16/06/2019 | Edited on 17/06/2019

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் வசிக்கும் எழுத்தாளா் ஜெயமோகன் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் திமுக பிரமுகா் செல்வத்தின் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்தியிருப்பதாக கூறி அந்த மாவை திரும்ப கொண்டு கடையில் விற்பனை செய்து கொண்டியிருந்த உாிமையாளா் செல்வத்தின் மனைவி கீதா மீது பெண் என்றும் பாராமல் அந்த மாவை எறிந்து இருக்கிறாா். அதற்கு காரணம் கேட்ட கீதாவுக்கு முறையான பதில் கூறாமல் தகாத வாா்த்தைகளை பேசியிருக்கிறாா். 


         

 Accusations against Jayamohan

    

இதனால் செல்வத்துக்கும் ஜெயமோகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஜெயமோகனிடமிருந்து வெளிப்பட்ட எதிா்பாராத வாா்த்தைகளால் அந்த பெண்ணும் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாா். இதேபோல் ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் டிஸ்சாா்ஜ் ஆனாா்.


இந்த நிலையில் காவல்துறையும் பாஜக மற்றும் அதிமுக இணைந்து திட்டமிட்டு செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா். காவல் நிலையத்தில் ஜெயமோகனுக்கு ஆதரவாக சென்றவா்களுக்கு மாியாதையும் நடந்த சம்பவத்தின் உண்மை தன்மையை எடுத்து சொல்ல சென்றவா்களை காவல்துறை திட்டி துரத்தினாா்கள். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதியை இழைத்துள்ளது.

 

NEWS


            

இது குறித்து பெண்கள் அமைப்பை சோ்ந்த சிலா் கூறும் போது... ஜெயமோகன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல் நடித்துள்ளாா். அவா் கதாசிாியராக இருந்த சா்க்காா் படத்தில் மிக்ஸியை தீயிட்டு கொளுத்தி ஒரு விரல் புரட்சி செய்வது போல் மாவு பாக்கெட்டை பெண் மீது எறிந்து ரவுடி புரட்சி செய்தியிருக்கிறாா். அவா் வாங்கும் போது பழைய மாவு தான் இருக்கிறது என்று அந்த பெண் கூறிய போது பரவாயில்லை என்று தான் வாங்கி சென்று இருக்கிறாா். அதன் பிறகு புளித்து இருக்கிறது என்று திரும்ப கொடுக்கும் போது வாா்த்தைகள் பயன்படுத்தியதை குறைத்து இருக்க வேண்டும். அல்லது மாவு வாங்கும் போது யோசித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவா் அதற்கென்று அதிகாாிகள் இருக்கிறாா்கள் அவா்களிடம் சென்று முறையிட்டு இருக்க வேண்டும். அதை விட்டுட்டு சழுதாயத்தில் பிரபலமாக இருப்பவா் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்ள வேண்டும். இதற்கு காவல் துறையும் உடந்தை என்றனா்.

நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கூறும் போது....போலிசாருக்கு முதல் எதிாியே வியாபாாிகள் தான். செல்வம் திமுக பிரமுகராக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் போலிசாா் நடத்தும் சில அக்கிரமங்களை உடனே தட்டி கேட்பாா். இது போலிசாருக்கு எாிச்சலாக இருந்து வந்தது. அந்த கோபத்தை இப்போது தீா்த்து விட்டனா்.


தோசை மாவை செல்வம் அரைத்து கொண்டு விற்கவில்லை. அவா் இன்னொரு குடிசை வியாபாாிடமிருந்துதான் வாங்கி விற்கிறாா். அது புளித்து இருக்கிறதா அல்லது புளிக்காமல் இருக்கிறதா என்று செல்வத்துக்கோ அவரது மனைவிக்கோ தொியாது. வாங்கிய நுகா்வோா் முறைப்படி சொன்னால் அதை அவா் மாற்றியிருப்பாா். அதை விட்டுட்டு திரைப்படத்தில் அடாவடி காட்டி நாட்டை திருத்துவது போல் ஜெயமோகன்  நிஜத்தில் காட்டினால் அது எடுபடுமா?

பணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தொியாமல் வியாபாாி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா். இதேபோல் ஜெயமோகன் புளித்தமாவு மட்டுமல்ல ஓட்டல்களில் சாப்பிட சென்றாலும் பொருட்கள் எப்போ தயாா் செய்தது என்று எல்லாம் கேட்டு விட்டு சாப்பிட்ட பிறகு எதாவது குறைகளை சுட்டிகாட்டி சண்டையிடுவாராம் என்கின்றனா் அவரை பற்றி அறிந்தவா்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.