Skip to main content

ஆ.ராசாவுக்கு எதிராகக் குவியும் புகார்கள்! தேர்தல் ஆணையம் திணறல்! 

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Accumulating complaints on A.Rasa

     


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுக்கள் குவிந்தபடி இருக்கிறது. அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இந்தப் புகார்களை அனுப்பி வைத்தபடி இருக்கின்றன. 

 

ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து ஆ.ராசா பிரச்சாரம் செய்தபோது, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார் ஆயிரம் விளக்கு தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் என்.வைத்தியநாதன். 

 

ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் வைத்தியநாதன் கொடுத்துள்ள புகாரில், “தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக முதலமைச்சரை கண்ணியமற்ற வகையில் பேசியுள்ளார் ஆ.ராசா. ஒரு எம்.பி. இப்படி கட்டுப்பாட்டை இழந்து பேசுவது கண்டனத்திற்குரியது. ஆபாசமும் அநாகரிகமும் நிறைந்த ஒருவரால்தான் இப்படிப் பேச முடியும். இத்தகைய பேச்சு வன்கொடுமை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் இருக்கிறது. ஆ.ராசாவின் தரக்குறைவான அநாகரிகமான பேச்சை, அவர் அருகில் இருந்த திமுக வேட்பாளர் எழிலனும் தடுக்க முயற்சிக்கவில்லை. அதனால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார் வைத்தியநாதன்.

 

அதேபோல, அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் இணைச்செயலர் பாபு முருகவேல் கொடுத்துள்ள புகாரில், ஆ.ராசா என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார் எனச் சுட்டிக்காட்டிவிட்டு, “ஆ.ராசாவின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்த இழிசெயலுக்கு எதிராக நடக்கும் கண்டனப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக, ஆ.ராசாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் செய்ய அவருக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் பாபு முருகவேல்.

 

இதைப்போலவே, பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிவதால், இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்வது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிற தேர்தல் ஆணைய அதிகாரிகள், இது குறித்த புகார்களை டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தபடி இருக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.