Skip to main content

தமிழகம் முழுவதும் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த 4 பேர் மீது குவியும் புகார்கள்

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Accumulating complaints against 4 people who have swindled crores of rupees by running a financial institution across Tamil Nadu


நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘யுனிக் அசட் புரமோட்டர்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட்’ என்ற பெயரில் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த செய்யது அலி, அழகிய மண்டபத்தை சேர்ந்த ஜெய சசிதரன், எட்வின் சுதாகர், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அதன் கிளை நிறுவனம் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவந்தன.

 

அந்த நிதிநிறுவனத்தின் கவர்ச்சி விளம்பரம் மற்றும் புரோக்கர்களின் மூளை சலவை செய்யக்கூடிய பேச்சுக்களை நம்பி, ஏராளமானோர் தங்களின் வருமானத்தில் பல லட்சங்களை முதலீடு செய்தனர். இதில் பலருக்கு கணக்கு முதிர்வு அடைந்தும் முதலீடு பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்காமல் அதன் உரிமையாளர்கள் காலம் கடத்திவந்துள்ளனர். மேலும் சிலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சில கிளைகள் பூட்டப்பட்டு அதில் முதலீடு செய்தவா்களுக்கு குறிப்பிட்ட நாட்களைக் கூறியும் அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

 

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வசந்தகுமார், தனது பெயரிலும் மனைவி மற்றும் தாயார் பெயரிலும் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருந்தார். அந்தக் கணக்கு முடிந்து ஓராண்டாகியும் பணத்தை நிதிநிறுவனம் திருப்பிக் கொடுக்காததால், மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிதிநிறுவனத்தைக் கண்காணித்துவந்தனர். இதில் அதன் உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபட்டு முதலீட்டாளர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்காதது உறுதியானது. இதையடுத்து நிதிநிறுவன உரிமையாளர்களான ஜெய சசிதரன் மற்றும் எட்வின் சுதாகரை போலீசார் கைதுசெய்து மதுரை மேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான செய்யது அலி, ரமேஷ் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

 

இதைதொடர்ந்து நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோர் புகார்கள் கொடுத்துவருகின்றனர். குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாகவும், தமிழகத்தின் பிற பகுதியில் உள்ளவர்களைச் சேர்த்து சுமார் 1,300 பேர் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அவர்களும் புகார்கள் கொடுக்கும்பட்சத்தில் அந்தப் புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.