Skip to main content

உழைப்பவனிடம் கணக்கு... கொள்ளையனிடம் ஆலோசனை... ஐ.டி ரெய்டு அற்புதம்!!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

சேகர் ரெட்டி வீட்டிலும் ரெய்டு நடத்தறாங்க, மந்திரி வீட்டிலேயும் ரெய்டு செய்யறாங்க...,மாவு தயாரிக்கும் தொழிலதிபர் வீட்டிலேயும் ரெய்டு... எல்லாம் ஒரு கணக்குக்கு தாம்பா.... என அரசியல்வாதிகள் நையாண்டி செய்கிறார்கள்.

ஈரோட்டில் மூலப்பட்டறை நால்ரோடு அருகே ஆயில் மில், மாவு அரைக்கும் இயந்திரங்களை தயாரிக்கும் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்கள் சகோதர்களான சண்முகம், பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் தான். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிளைகள் அசோகபுரம் மற்றும் சோலார் ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது.  

 

Account to the worker ... Advice to the robber ... IT Raid is wonderful


இதில் பல பேர் தொழிலாளர்களாக வேலை செய்து  வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 18 பேர்  மூன்று குழுக்களாகப் பிரிந்து ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள நிறுவனம், சோலார், அசோகபுரம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு உள்ளே சென்று கதவுகளை பூட்டி  சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

மாலை 6 மணி வரை நீடித்த இந்த வருமான வரி சோதனையில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு என்றும், பல்வேறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் விற்பனை செய்ததில் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. 

தொழில் செய்பவர்கள் வரி ஏய்ப்பு என்பது உண்மையாகவே இருக்கட்டும். எந்தத் தொழிலும் செய்யாமல் கோடிக்கணக்கில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்ததை கையும் களவுமாக கண்டுபிடித்த வருமான வரித்துறை இறுதியில் இந்தப் பணத்திற்கு கணக்கு காட்டினால் போதும் என கொள்ளையர்களுக்கு ஆலோசனையும், இங்கு உழைப்பவனை கணக்கு கேட்பதும் என்ன சொல்வது வெட்கப்பட வேண்டும் என வேதனையுடன் கூறுகிறார்கள் ஈரோட்டில் தொழில் புரியும் வணிகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.