Skip to main content

விபத்தில் 3 பேர் பலி...  சிசிடிவி பதிவை மறைக்கும் போலீஸ்... யார் அந்த விஐபி?

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலையில் தினம் தினம் விபத்து நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தில் இந்த சாலையில் நடைபெறும் விபத்துக்கள் தான் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். தற்போது சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைகவசம் அணிந்துக்கொண்டு இருசக்கர வாகனங்களை இயக்கவேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வை பெரும்பான்மையானவர்கள் ஏற்று கடைப்பிடித்து நடப்பதில்லை என்பதே பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. வேகமாக சென்ற மூவர் மீது வாகனம் மோதி பலியாகியுள்ளார்கள்.

 

Accident in thirupathur police hiding CCTV footage... Who's the VIP?

 

திருப்பத்தூர் மாவட்டம், சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த 25 வயதான வேலு, வடச்சேரி பகுதியை சேர்ந்த 24 வயதான தமிழ் சுந்தர் மற்றும் 24 வயதான சந்தோஷ் மூவரும் ஒரே வாகனத்தில் ஜனவரி 23ந்தேதி மாலை சென்றுக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இவர்கள் பின்னால் வந்த வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் வேலு, தமிழ்சுந்தர் இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்கள். சந்தோஷ் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்திவிட்டு உயிருக்கு போராடியவருக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறி வண்டியில் ஏற்றி அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரும் ஜனவரி 24ந்தேதி காலை பலியாகியுள்ளார்.

மோதிய வாகனம் குறித்து யாருக்கம் அடையாளம் தெரியவில்லை. இருந்தும் இது தொடர்பாக வாணியம்பாடி தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Accident in thirupathur police hiding CCTV footage... Who's the VIP?


இதுப்பற்றி பொதுமக்கள் சார்பில் சிலர் நம்மிடம், விபத்து நடந்தயிடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட மறுக்கிறது, சம்மந்தப்பட்டவர்களையும் மற்றவர்களுக்கு தரக்கூடாது என மிரட்டியுள்ளது.

காவல்துறையினர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என வழக்கு பதிவு செய்ய பார்க்கிறது. அப்படி செய்கிறார்கள் என்றால், அந்த வாகனம் ஏதோ மிக முக்கிய பிரமுகருடையதாகத்தான் இருக்கும். அதை மறைக்கவே இப்படி காவல்துறை செய்கிறது. மூன்று உயிர்கள் பலியாகியுள்ளது, அந்த குடும்பத்தின் நிலை காவல்துறைக்கு பெரியதில்லையாம், யாரோ ஒரு முக்கிய பிரமுகர் தான் முக்கியமா என கேள்வி எழுப்புகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.