Skip to main content

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள தட்டான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் சொக்கலிங்கம், அவரது உறவினர் காளிதாஸ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

 

அப்போது வடுகாட்டிலிருந்து சத்தியராஜ், ரெங்கநாதன் ஆகிய இருவரும்  ஒரு மோட்டார் சைக்கிளில் நாகுடி நோக்கி சென்றுள்ளனர். மேல்மங்கலம் சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பள்ளி ஆசிரியர் சொக்கலிங்கம், வடுகாட்டைச் சேர்ந்த சத்தியராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


 

accident

 

மேலும் ரெங்கநாதன், காளிதாஸ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா மற்றும் போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளிதாஸ், ரெங்கநாதன் இருவரையும்  சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

accident

 

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்