தேனி அருகே தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
போடியிலிருந்து உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேன் மூலமாக கிராமத்தினர் சென்றுள்ளனர். தீர்த்தத்தொட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இந்த நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.