Skip to main content

வருங்கால மருத்துவரை பலிகொண்ட வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலை விபத்து!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

எப்பொழுதுமே போக்குவரத்தால் பரபரக்கும் வேளாங்கண்ணி பகுதி கிழக்கு கடற்கரை சாலை இன்று  காலை டாக்டராகும் கனவோடு  பள்ளிக்கு சென்ற சிறுமி ஒருவரை பலிகொண்டிருப்பது அப்பகுதி மக்களை பதரவைத்திருக்கிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்கடைதெரு பகுதியை சேர்ந்தவர்கள் மதியழகன் புனிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதுடைய மகரஜோதியும்  12 வயதுடை பூபாலன் என இரண்டு பிள்ளைகள். மதியழகன் வேளாங்கன்னியில் பொரிக்கடை வைத்துக்கொண்டு, அதில்கிடைக்கும் வருமானத்தில் இரண்டு பிள்ளைகளையும் அவர்கள் விருப்பத்திற்கு படிக்கவைத்துள்ளார். மகரசோதி நாகூரில் உள்ள கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

accident in nagai velangkanni


இந்தநிலையில்  இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் தனியார் பள்ளி என்பதால் ஸ்பெஷல் கோச்சிங் என்கிற பெயரில் பள்ளியை செயல்பட்டது. பள்ளியில் தேர்வு இருப்பதாக சாப்பிடாமல்கூட, தனது அப்பாவை அழைத்துவந்து பள்ளியில் விடும்படி கெஞ்சியிருக்கிறார், அவருக்கு கொஞ்சம் வேலை இருந்ததால், உறவினரான பக்கத்து வீட்டைச்சேர்ந்த வீரமணியை அழைத்துக்கொண்டு போக சொல்லியிருக்கிறார்.

அவரும் தனது ஸ்கூட்டியில் வீட்டில் இருந்ரு கிளம்பி தெற்கு பொய்கை நல்லூர் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாகவந்த அரசுப்பேருந்து இடித்துவிட்டு சென்றுவிட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு மகரஜோதியை தூக்கிக்கொண்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பிள்ளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என கூறியுள்ளனர். இதைகேட்ட அவரது உறவினர்களும் பெற்றோர்களும் துடியாய் துடித்து சாலையில் படுத்து அழுதுபுறண்டனர்.

 

accident in nagai velangkanni


அந்த மாணவியை அழைத்துவந்த வீரமணி லேசான காயங்களோடு மருத்துவமனையில் இருக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு மகரஜோதி டூவீலரை அரசுப்பேருந்துதான் இடித்தது என்பதை கண்டுபிடித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
பரிதாபமாக பலியான மாணவியின் உறவினர்களோ," தவமிருந்து பிறந்த பிள்ளை மகரஜோதி, அதனாலதான் அய்யப்பனின் பெயரை அவருக்குவச்சாங்க, அதுக்கு பிறகு ஒரு மகன், இரண்டு பிள்ளைங்களோட தினசரி உழச்சி சம்பாதிக்கிறத பிள்ளைங்க படிப்புக்காகவே செலவழிச்சார், மகரஜோதியின் அப்பாவுக்கு அவர்மீது அவ்வளவு பாசம், டாக்டருக்கு படிக்கனும்ங்கிறது அவளோட லட்சியம் அதுக்காகவே கோச்சிங் செண்டர் போய்கிட்டு இருக்கா, படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து அலுப்ப ஆயுசாபோய்டுச்சி." என கலங்குகின்றனர்.

 

accident in nagai velangkanni

 

"இந்த சாலையில தினசரி ஏதாவது ஒரு விபத்து நடந்துவிடுகிறது. அதற்கு காரணம் இரவு முழுவதும் வாகனத்தை இயக்கிவருபவர்கள் இங்குவந்ததும் பைபாஸ் சாலையாக இருப்பதால் அதிவேகமாக போகின்றனர் அதனுடைய விளைவு, விபத்தாக மாறிவிடுகிறது, தினசரி பஸ் கவிழ்ந்து பலி, வேன் மோதி படுகாயம், லாரிகள் நேருக்கு நேர் மோதல் என அபத்தமான செய்தியாக இருக்கும். இதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை. இனியாவது செக்போஸ்ட்டுகளில் காவல்துறையை நியமித்து கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்,"  என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.