Skip to main content

சேலத்தில் நள்ளிரவில் கோர விபத்து: நான்கு பேர் பலி!

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

சேலத்தில் நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன் உள்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பிரபா. இவர்களுக்கு அகஸ்தியா, பீமாராவ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

 

accident in midnight: 4 number of death

 

இறைச்சிக் கடைக்காக கஞ்சநாய்க்கன்பட்டியில் மாடு ஒன்றை வாங்கிய ரமேஷ், சனிக்கிழமை இரவு (மே 25) நாட்டாமங்கலத்தில் உள்ள தனது கடைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார். 

 

கஞ்சநாய்க்கன்பட்டி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சாதிக்பாஷா (46) என்பவருடைய சரக்கு ஆட்டோவில் மாட்டினை ஏற்றினார். அப்போது சாதிக்பாஷாவின் மகன் ரஹமது பாஷா (16), ரமேஷின் உறவினர் பாலு (30) ஆகியோர் அவர்களுடன் ஆட்டோவில் ஏறினர். நள்ளிரவு 12.30 மணியளவில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காற்றாலைக்குத் தேவையான ராட்சத இறக்கைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி மெதுவாக மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. 

 

அதைப் பின்தொடர்ந்து தண்ணீர் டேங்கர் லாரி, காலி பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி, ரமேஷ் சென்ற சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு லாரி என அடுத்தடுத்து அணிவகுத்துச் சென்றன. இந்நிலையில் சரக்கு ஆட்டோவுக்கு பின்னால் வந்த லாரி, திடீரென்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, தண்ணீர் டேங்கர் லாரி ஆகியவற்றின் மீதும் மோதியது.

 

accident in midnight: 4 number of death


இதில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய சரக்கு ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. அந்த வாகனத்தில் இருந்த ரமேஷ், பாலு, ரஹமது பாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

 

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த சாதிக்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சாதிக்பாஷாவும் இறந்தார்.

 

வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை நெரிசலை சீர் செய்தனர். 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.