ADVERTISEMENT
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சைதாப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்குத் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும், ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியும் காட்டினார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments