Skip to main content

வேகத்தடையின் அதிக உயரத்தால் ஏற்பட்ட விபத்து... பெண் உயிரிழப்பு!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

கோவை போத்தனூர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி பத்மா இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்வதற்காக அழகர்சாமி பத்மாவும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது செட்டிபாளையம் பிரிவில் வேகத்தடையை ஏறி இறங்கும்போது பின்னால் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் முன்புறம் மோதியதில்  நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர்.

 

Accident caused by high altitude of the speed limit...


இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில்  சிக்கி பத்மா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். அவரது கணவர் அழகர்சாமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

வேகத்தடை வழக்கத்திற்கு மாறாக அதிக உயரத்தில் போடப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஏற்கனவே வேகத்தடையில் உயரத்தை குறைக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுக் கொள்ளவில்லை எனவும், அடுத்த விபத்து ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இந்த வேகத்தடையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

விபத்து குறித்து போத்தனூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுனர் பத்திரன் என்பவரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.