Skip to main content

அரசூரில் கார் மோதி 40 ஆடுகள் பலி 20 ஆடுகள் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்கரவர்த்தி(49). இவர் ஆட்டு பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக காலை ஆடுகளை ஏரி மற்றும் வயல்வெளிபகுதிகளில் மேய்த்துவிட்டு மாலையளவில் வீட்டிற்கு ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது அரசூர் பாரதி நகர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் வேகமாக வந்து ஆடுகள் மீது மோதியது. கார் ஓட்டுநர் செல் போன் பேசிக்கொண்டு வந்ததால் விபத்து நடந்ததாக தெரிகிறது. 
 

accident



கார் வேகமாக வந்ததால் காரின் உட்பகுதியில் 5 ஆடுகள் மாட்டிக் கொண்டு தொலைவில் சென்று கார் நின்றது. இதில் 40ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமாடைந்தன.


இதை அறிந்த பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரி இறந்த ஆடுகளைசாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.