Advertisment

3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 25, 544 வாக்குகள் பெற்று 1480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24, 044 வாக்குகள் பெற்றுள்ளார்.

Advertisment

மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். வேலூர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளில் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

a

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இதில், ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe