{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Pr3QHIWeFFY.jpg?itok=oRAkNtt6","video_url":" Video (Responsive, autoplaying)."]}

கள்ளக்காதல் மோகத்தால், பெற்ற குழந்தைகளை தாயே பாலில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.

சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு விஜய் பணிக்குச் சென்றுவிட்டார். வேலைப்பளு காரணமாக அன்றிரவு விஜய்யால் வீட்டுக்கு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை விஜய் வீட்டுக்கு வந்து பார்த்த போது அபிராமியை காணவில்லை. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்த விஜய், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. குன்றத்தூரில் பிரியாணிக் கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றதாக தெரிகிறது.

கடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் அவரது மகள் மட்டும் இறந்துள்ளார். இதனையடுத்தே 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் மகனுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தப்பிச்சென்ற அபிராமியை தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தின் உதவியுடன் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

tik tok

இந்நிலையில், தற்போது சமூகவளைதளங்களில் அபிராமி - சுந்தரத்தின் டப்ஸ்மாஷ் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறன்றன. இதன் மூலம் இவர்களது காதல் டப்ஷ்மாஷ் வழியாகவும் மலர்ந்தது தெரியவந்துள்ளது. அதில் ஒரு வீடியோவில் பிரபலமான காதல் திரைப்படமான ராஜா ராணி படத்தில் வரும் வசனத்தை இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ளனர்.

அதில், சுந்தரம்: இதெல்லாம் யோசிச்சு பாத்தாலே நைட் தூக்கம் வருமான்னு தெரியல... அபிராமி: ஆனா இன்னைக்கு நா நல்லா தூங்குவேன்.. எல்லா நைட்டும் என்னக்காக யார் இருக்கா என யோசிச்சாலே பாதி நைட் போய்ரும்... இப்போ புருஷன் நீ இருக்கேல்லா... என்ற அந்த ஆடியோவுக்கு இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ளனர். இப்படி காதல் வசனங்கள் நிறைந்த பல ஆடியோக்களுக்கு இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ளனர்.